5 செப்டம்பர், 2012

தமிழ் ஈழமும் முஸ்லிம்களும் - பகுதி 4


தமிழர்களின் உரிமை மீட்புப் போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்த போதிலும், அவர்களின் தனி ஈழக் கோரிக்கையைக் கிழக்கு மாகாணத்தில் வசித்து வந்த முஸ்லிம்கள் ஏற்கவில்லை. (வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிதான் ஈழம்) ஒன்று பட்ட இலங்கையில் ஜனநாயகப்பூர்வமான முறையில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதன் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நம்பினர்.
தனி ஈழத்தில் தங்களது நலன்கள் பாதுகாப்பாக இராது என்றும் ஒன்று பட்ட இலங்கையில் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எண்ணினர். ஆனால் தமிழ்ப் போராளிகளின் எண்ணம் வேறு விதமாக இருந்த்து. மொழி அடிப்படையில் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களிடமுள்ள ஆயுத வலிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களைத் தங்களது கோரிக்கையை ஏற்குமாறு செய்ய முடியும் என நம்பினர். 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட இந்த பத்து ஆண்டுகள் தமிழ்ப் போராளிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிறைந்த காலமாகவே இருந்த்து. இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் அரசுப் படையினருக்கும் பெரும் மோதல்கள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலங்கைப் படையினரை எதிர்த்துப் போராடி அதே நேரத்தில் தங்களுக்குள்ளும் இந்த இயக்கங்கள் போரிட்டுக் கொண்டன. இந்தச் சகோதர யுத்த்த்தில் (!) விடுதலைப்புலிகளின் (LTTE) கையே மேலோங்கியது. பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த தலைவர்களை ஒருவர் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விடுதலைப்புலிகள் கொன்றழித்தனர்.
அரசியல் ரீதியில் போராடிய தமிழ்த் தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், உமா மகேஸ்வரன் ஆகியோரையும் விடுதலைப்புலிகள் விட்டு வைக்கவில்லை. விடுதலைப் போர்க்களத்தில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் பிற இயக்கங்கள், தலைவர்கள் யாருமே இருக்க்க் கூடாது என்ற பிரபாகரனின் பாசிஸ மனப்பான்மையே இந்த ஈவு இரக்கமற்ற படு கொலைகளுக்குக் காரணமாகும். ஒரு பக்கம், பிற போராளிக் குழுக்களைச் சார்ந்த முன்னணித் தலைவர்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் கோபப் பர்வை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மீதும் திரும்பியது. ஈழக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத முஸ்லிம்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினர். விளைவு? 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் மீதும் பெரும் தாக்குதல்கள் நடத்தினர்.
முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் ஆகிய அனைத்தும் தாக்குதல்களுக்கு உள்ளாயின. தமிழர் பகுதிகளுக்கு வியாபாரத்திற்காகச்  சென்ற சிறு வியாபாரிகளும், வயல்களுக்குச் சென்ற சிறு கூலித் தொழிலாளர்களும், “சிங்கள அரசுக்கு உளவு செல்பவர்கள்என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். இத்தனை வன்முறைகளுக்கும் உச்சகட்டமான 3.8.1990 அன்று காத்தான்குடி என்ற ஊரில் உள்ள கிராவல் தெரு பள்ளிவாசலில் காலை தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் வெளியிலிருந்து இயற்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு 103 பேரைக் கொன்றனர்.
அதே ஊரில் உள்ள குசைனியா பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. எறாஊர், கிரான்குளம், அழிஞ்சிப் பொத்தான், அகமதுபுரா, பள்ளிகொடா ஆகிய ஊர்களிலும் விடுதலைப்புலிகள் முஸ்லிம் தெருக்களில் புகுந்து தாக்கி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றனர்.
யாழ்ப்பாணம் நகரில் வசித்து வந்த 70,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், விடுதலைப்புலிகளின் பயமறுத்தல் காரணமாக தங்களது வீடு, வாசல்கள், நிலபுலன்களை விட்டு விட்டு வெளியெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. “இரண்டு மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் உங்களின் உயிர் மிஞ்சாதுஎன்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இம்மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி ஓடினர்.
கடந்த இருபது ஆண்டுகளாகப் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அகதி முகாம்களில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். (27.12.2009 அன்று கொழும்பில் நடைபெற்ற அனைத்து இலங்கை முஸ்லிம்கள் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றி இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷே, இம்மக்கள் தங்களது சொந்த வீடுகளில் 31.5.2010க்குள் குடியமர்த்தப்படுவார்கள். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். ஆதாரம் ஹிந்து நாளிதழ் 28.12.2009)     (தெடரும்.....

கருத்துகள் இல்லை:

2019 டிசம்பர்