26 ஜனவரி, 2010

எங்கள் ஊருக்கு ஏற்பட்ட சாபக்கேடு....

      கடந்த ஒரு மாத காலமாக புதுவித மான வைரஸ் காய்ச்சலால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 26இந்த 26ல் வயது வித்தியாசமே கிடையாது குழந்தைகள் முதல் நடுத்த வயது முதியவர்கள் வரை அடங்கும். ஆனால் அரசு தரப்பில் கூறப்படுவது என்ன வென்றால் இது சாதரண வைரஸ் காய்ச்சல் தான்.மரணச்சம்பவம் வைரஸ் காய்ச்சலினால் ஏற்பட்டதல்ல என்று கூறுகிறது. அப்படி என்றால் இந்த மரணத்திற்கு என்ன காரணம் இருக்க முடியும். மருத்துவர்கள் ஒருசிலர் கருத்து இந்த வைரஸ் காய்ச்சல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியாவிற்கும் பின் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கும் பரப்பப்பட்டதாக கருத்து கூறுகிறார்கள். 15நாட்களுக்கு முன்பாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச்சென்றது என்னவானது? எல்லாம் குப்பைத்தொட்டிக்கு சென்று விட்டதோ என்று அஞ்சத்தோன்றுகிறது. இது வரை எந்த முடிவும் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறது சுகாதாரத் துறை. மனித உயிர்கள் என்ன அவ்வளவு சாதரணமாகிவிட்டதா?.  கொசுமருந்து அடித்த வகைக்கு 35இலட்சம் செலவாகிவிட்டதாக கணக்கு காண்பிக்கிறது நகராட்சி நிர்வாகம்.
     வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர் இந்த காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்னதான் முடிவு?
    இந்தச் சூழலில் நாளை 27.01.2010 நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது.
       யாருக்காக யார் பயப்படுகிறார்கள் என்றுதான் தெரியவி்ல்லை. இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கப்போகிறது.

20 ஜனவரி, 2010

ஜாதி ஒழிய வேண்டுமா? பெரியார் சொன்னது.....

 “ஜாதி ஒழியணுமா வேண்டாமா? அதற்கு ஆணி வேர் ஒழியணுமா, வேண்டாமா? அப்படி ஒழிய வேண்டுமானால், இந்து மதம், சாஸ்திரம், புராணம், அதை உண்டாக்கின பார்ப்பான் ஒழிய வேண்டாமா? இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் பணக்காரனாகலாம், பறையன் பணக்காரனாகலாம், படையாச்சி பணக்காரனாகலாம், பணக்காரத் தன்மை ஒருவனுக்கு வந்து விடுவதாலேயே அவனது ஜாதி ஒழிந்து விடுமா?
 ஆனால் ஜாதி ஒழியணும் என்றால், கடவுள் ஒழியணும், கடவுளுக்கு அவன்தான் மணியாட்டணும் என்கிற பார்ப்பான் ஒழியணும். இதைத்தவிர வேறு எந்த வழியிலே ஜாதி ஒழியும்.
                         - தந்தை பெரியார்

   உலகத்திலேயே ஒரு கண்டுபிடிப்பைப் செய்து அந்த கண்டுபிடிப்பை நிறைவேற்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பு வெற்றிகரமாக செயல் பட கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ஒரு தலைவர் உண்டு என்றால் அது பெரியார்தான்.  அவர் செய்த கண்டுபிடிப்பு சாதி என்ற கற்பனையால் பார்ப்பனர்கள் மற்றவர்களை சுரண்டுகிறார்கள் என்பது.  இதற்கு அவர் ஏற்படுத்திய அமைப்பு திராவிடர்கழகம். இதற்காக பெரியார் விட்டுச் சென்ற சொத்து ரூ.16,000 கோடி,
  இன்று அத்தனையும் வீணர்களின் கையில் வீணாகிக் கொண்டிருக்கிறது.



நன்றி சங்கமித்திரா

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை துவக்க விழா




       கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை என்கிற பொது அமைப்பை கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் 17.01.2010 துவக்கி வைத்தார்கள்.
      விழாவில் துவக்க உரையாற்றிய கவிக்கோ “இஸ்லாமியர்களின் பிரச்சனை என்ன வென்றால்? என்ன பிரச்சனை என்பதை உணராததே அவர்களின் பிரச்சனையாக இருக்கிறது.
   சிறு சிறு அமைப்புகளாக பிளவுபட்டு கிடக்கும் இந்த சமூகம் ஒன்றுபட வேண்டும். ஜக்காத் என்பதை சிறிது சிறிதாக கொடுப்பதால் அதன் நோக்கம் பூர்த்தியாகாது. ஊருக்கு ஊர் பைத்துல்மால் என்கிற பொது அமைப்பை, தர்மகூடத்தை அமைத்து அதில் வருமானம் உள்ளவர்கள் தங்களின் வருமானத்திலிருந்து இரண்டரை சதவிகிதத்தை கண்டிப்பா கொடுத்துவிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் பணத்தை இல்லாதவருக்கு கொடுத்து மறு வருடம் அந்த நபர் ஜக்காத் கொடுக்கும் தகுதியை அடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதே ஜக்காத்தின் உன்னதமாக நோக்கமாகும். முறையாக அதை தொடர்ந்து செய்து வந்தாலே சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றதாழ்வுகள் சரிசெய்யப்படும்.  என்று கூறினார்.
      

அறக்கட்டளையின் பொதுவான நோக்கங்கள்....

  • ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிப்பினைத் தொடர வழி செய்தல்
  • ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க நிதி உதவி செய்தல் , வழி காட்டுதல்
  • பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
  • உயர் கல்வி கற்க ஆலோசனை வழங்குதல்
  • வேலை வாய்ப்பிற்கு வழி காட்டுதல்
  • சிறு தொழி்ல்கள், வணிகம் செய்ய நிதி உதவி செய்தல், கடன் வழங்குதல்.
  • ஏழை மக்களின் மருத்துவச் செலவிற்கு உதவி செய்தல்
  • கடையநல்லூரி்ல் பெண்களுக்கான ஒரு கலைக்கல்லூரியும், பொதுவான பொறியியல் கல்லூரியும் துவக்குதல்.
திட்டங்க அனைத்து உன்னதமான நோக்கம்தான். தொடர்ந்து இவர்களின் பணிகள் சிறப்பாக நடைபெற்று பயனாளிகள் பயன் பெற்று வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துவோம்.

16 ஜனவரி, 2010

நாமும் சினிமா விற்பனர்கள் தான்

        சினிமா விமர்சனத்த வலை பகுதில எழுதுறது தப்பா? அப்டினு கேக்றதவிட தேவை?யான்னுதான் கேக்கணு. சினிமாவ பத்தி நாம ஏங்க எழுதனு... அதற்பரப்புறதுக்குதா எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் போட்டிபோட்டுக்குட்டு இருக்க...., பத்தாதுக்கு சில சேனல்களு சொந்தமா சினிமா தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க ஒளிபரப்புற நிகழ்சிகள்ல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ விளம்பரம் பண்ணி அறுத்துக்குட்டு தான இருக்காங்க. எப்டி பாத்தாலும் எத்தன படங்க நல்லதா பாக்குறாப்ல இருக்கு நூத்துல ஒண்ணுரெண்டு தேறு. சன் நெட்வொர்க் வெளியிட்டிருக்குற படங்க சறியா போகுதோ இல்லையோ வியாபாரத்த எப்படி செய்யணும்ணு சரியா தெரிஞ்சவங்க.  ஒருபக்க ஊடகங்கள் மூலமா பண்றாங்க சரியா போகல கொஞ்ச மந்தமா இருக்குண்ணு வெச்சுக்கங்க, படத்துல நடுச்சவங்கள ரசிகர்கள் முன்னாடி நிறுத்தி (இந்த மக்கள் எவ்வளவு முட்டாள்களுன்னு தெரிஞ்சுகிட்டு) கொஞ்ச கூட்டத்த கூட்டக்கூடிய (புத்திசாலித்தனமான) யோசனய செஞ்சுக்கிட்டு இருக்கு.
       யாரோ காசுபோட்டு எடுக்குறாங்க, யாரோ நடிக்கிறாங்க, யாரோ வாங்குராங்க எடைல நாம யாருங்க அத விளம்பரம் பண்றதுக்கு?  உலகத்துல வேற பிரச்சனையே இல்லியா?
      நடிச்சவங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமான அளவுக்கு அதிகமா கிடைக்கும்,  புகழ் சொல்லவே வேண்டா (பத்தாதுக்கு நாமளு சேந்து பரப்புரதால) ஏறிக்கிட்டே போவுது. கடைசில நமக்கு என்னங்க கிடைக்கு?...
               இந்தியாவ தவிற மற்ற நாடுகள்ல இது இல்லியான்னு? கேக்க தோணு.  இருக்கு அவங்கள்லா சினிமாவ பொழுது போக்குக்குதா வெச்சுருக்காங்க. இந்தியாவுல மட்டுதா வாழ்க்கையோட இணைச்சு வாழ்ந்துகிட்டே இருக்காங்க. சினிமாவுல காமிக்குறது எல்லா உண்மையான வாழ்க்கையோட ஒப்பிட க்கூடியவங்கதா இங்க நிறையப்பேரு இருக்காங்க. 
        சினிமாவே பாக்கக்கூடாதுன்னு சொல்லலங்க., சினிமா மட்டுமில்லங்க எல்ல பொழுது போக்கு விஷயங்களையு அனுபவிக்கணு. சினிமா பாத்துட்டு வெளியில வந்ததோட சினிமா தியேட்டரோட விட்டுடணுங்க வெளியில என்ன விமர்சன வேண்டி கிடக்கு.
    சினிமா எதங்க பரப்புது... நாகரீகச் சீரழிவுகளின் அறங்கேற்றம், வன்முறைகலாச்சாரம், கொடூரம், தீவிரவாதத்தை பயிற்றுவிக்கும் துவக்கப்பள்ளி.
     நல்ல கலாச்சார அம்சங்கள் உள்ள படங்க வரட்டு. பாக்கலா, ரசிக்கலா,(ரசிக்கறதோட விட்டுடனு)  சினிமா மாறாதுங்க.  நாமதாங்க மாறாம இருக்கணு. மனித நேயத்தோட, சகோதர எண்ணங்களோட மனுசனா...... இருக்கணு.

15 ஜனவரி, 2010

கமல் ஒரு மகாநடிகர் தான்


          ஜக்குபாய் திருட்டு விசிடி வெளியான விஷயத்தில் நடிகர்கள் கூட்டாய் முதல்வரை சந்தித்து வேண்டுகோள் விடுக்க..... முதல்வரும் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உடனடியா தடுத்து விட்டதாக சந்தோசப்பட்டுக்கொண்ட நடிகர்கள் கூட்டம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒவ்வொரு நடிகர்களாக தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
     அது அனைத்தும் நகைப்புக்குறியதுதான்.   முன்பு ஒரு சமயத்தில் இதுபோன்ற விடையத்திற்கு(அதாவது திருட்டு விசிடி பற்றி) நடிகர் கமல் கூறும் போது “என்னதான் அதற்கான தடுப்பு முயற்சியில் ஈடுபட்டாலும் திருட்டு விசிடி வந்து கொண்டுதான் இருக்கும். சினிமா எடுக்கும் விதத்தில் புதுமையை கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க முடியும். ஆகவே தடுப்பு முயற்சி ஒரு பக்கம் நடந்தாலும் புதுமைதான் ஜெயிக்கும்” என வாதிட்டார்.
         ஆனால் தற்போது என்ன கூறினார்.  திருட்டு விசிடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறைமுகமாக கூறிவி்ட்டு அவ்வாறு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இது ஒருவகையில் தீவிரவாதத்திற்கும் பயன்படுகிறது.  ஆகவே திருட்டு விசிடியை ஆதரிக்கக்கூடாது என்று கூறியுள்ளார். இந்த மகா நடிகர்.  திரையில் தான் பல அவதாரங்கள் எடுக்கும் இவர்இயல்பு வாழ்க்கையிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
       கடவுளை இல்லை என்று கூறுவார், பின்பு இல்லை என்று கூறவில்லை இருந்தால் நல்லா இருக்குமே என்றும் கூறுவார். முஸ்லிம்களை தீவிர வாதிகளாக காட்டுவதில் இவர் எடுத்துக்கொண்ட புதிய யுக்திகள்தான் சமீபத்திய உன்னைப்போல் ஒருவன் .
     ஒட்டு மொத்த ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவதில் ஒருமித்த கருத்துக்களோடு உலா வந்து கொண்டிக்கி்ன்றன.
     எந்த மதங்களும், தீவிர வாதத்தை ஆதரிக்க வில்லை.  மாறாக வேலைவெட்டி இல்லத சில விசமிகள் செய்யும் செயல்களால் அப்பாவி மக்கள் தான் அவதிப்படுகிறார்கள். இதைக்கூடவா புரிந்து கொள்ள முடிய வில்லை இந்த மகா நடிகனுக்கு.
   ஒரு முஸ்லிம் கர்பிணி பெண் நடுரோட்டில் படு கொடுரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை சொல்லி நல்லபெயர் எடுக்கமுயற்சித்தது என்னவோ போலிவேஷம்தான். படத்தின் முக்கிய கருவே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டு வேண்டும் என்பதுதான்.
      எதிர்கால சந்ததிகள் சினிமாபார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டமாகத்தான் இருக்கும். என்ற இவரின் வசனம் நிச்சயம் வெல்லக்கூடாது. சினிமா என்கிற ஒரு மாய வலையிலிருந்து நம் இளைஞர்கள் மீழ வேண்டும். அப்பொழுதுதான் மனிதம் வெல்லும்

12 ஜனவரி, 2010

   உலகில், ஏகாதிபத்தியத்தின் தலைவனாக தலைமகனாக அமெரிக்கா தற்போது விளங்கி வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் அதன் ஊதுகுழல்களாக, எடுபிடிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
  உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான சோவியத் ரஷ்யா சிதறுண்டு அது தனது வல்லாண்மையை இழந்த பிறகு, அடிமரிக்கா கேட்பாரற்ற ஒற்றை வல்லரசாக உருவெடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
     சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோவியத் ரஷ்ணா, அமெரிக்காவிற்குச் சவால் விடும் வண்ணம் இராணுவ வலத்தில் மட்டுமின்றி, அனைத்துத் துறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. கியூபாவை அமெரிக்கா தாக்க முற்பட்டபோது, அன்றைய ரஷ்ய ஜனாதிபதி குருசேவின் எச்சரிக்கை காரணமாக அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க நேரிட்டது. வான்வெளிச் சாதனையில் நாங்கள் அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ரஷ்ய ஜனாதிபதி குருசேஷ் ஒரு முறை கிண்டலுடன் இவ்வாறு குறிப்பிட்டார். "Our Sputinic Says Peep..... Peep... All Over the World Except wash.  Incton Where it laughs Haa..... Haa.. Haa.."  அவையெல்லாம் பழங்கதையாய்ப் போய்விட்டன.

ஊருக்கு ஒரு நீதி ஆளுக்கு ஒரு நீதி

     தனக்கு ஒரு நீதி பிற நாடுகளுக்கு ஒரு நீதி என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு ஒன்றும் புதிதானது அல்ல. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிதது வருகிறது. அதன் வெறி இன்னமும் அடங்கிய பாடில்லை.
     அமெரிக்காவின் பூர்வ கதையைப் பார்த்தால் அக்கதையின் பக்கங்கள் முழுவதும் பச்சை இரத்தவாடையே வீசுகிறது. கொலம்பஸ் காலத்திலிருந்தே இந்தக் கோரத் தாக்குதல் தொடங்கி விட்டது. கி.பி.1494க்கும் 1506க்கும் இடைப்பட்ட இந்தப் 12 ஆண்டுகள் காலத்தில், சுமார் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நாட்டின் பூர்வீகக்குடி மக்களான செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். நஞ்சூட்டப்பட்டும், தூக்கில் இடப்பட்டும், கூரிய ஈட்டிகளால் தாக்கப்பட்டும, நாய்களால் வேட்டையாடப்பட்டும் இம் மக்கள் கொல்லப்பட்டனர்.
       அமெரிக்காவில், வெள்ளையர்கள், குடியேறியபோது, மிச்சமிருந்த பூர்விகக் குடிமக்களும், இராணுவத்தாலும் நில ஆக்கிரமிப்பாளர்களாலும் கொல்லப்பட்டனர். தவிரவும், அம்மை நோயைப் பரப்பும் கிருமிகள் கொண்ட போர்வைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் நோய்க்கு ஆளாகிப் பலியாயினர். பல்லாயிரக்கணக்கான பூர்வீக மக்கள் அவர்கள் உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு கண் காணாத பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சென்றவர்கள் குளிராலும், பட்டினியாலும் இறந்தனர். 1830 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இராணுவத் தளபதியாக இருந்த வில்லியம் ஷெர்மான் என்பவர் அதிக எண்ணிக்கையிலான செவ்விந்தியர்களை இந்த ஆண்டு கொன்றுவிட்டால் , அடுத்த ஆண்டு நமது பணி எளிதாக இருக்கும் என்றார். இப்படி இலட்சக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று அவர்களின் சடலத்தின் மீது உருவான நாடு தான் இன்றைய உலக முதன்மை வல்லரசான அமெரிக்காவாகும். எனவே அமெரிக்காவின் ஆதிக்கவெறி, கொலை வெறி அதன் நாடி நரம்புகளிலேயே ஊடுருவியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

அணுகுண்டு நாயகன்
     தன்னைத் தவிர தனது கூட்டாணிகளைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை மிரட்டிவரும் அமெரிக்காவில் தான் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கு உள்ளது. சாதாரணக் குடிமக்கள் மீது அணுகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய முதல் நாடும் அமெரிக்காதான். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் நாள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு நகரங்கள் மீது அமெரிக்கா விமானங்கள் அணு குண்டுகளை வீசின. இதன் காரணமாக,இந்த இரு நகரங்களிலும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தனைக்கும், இரண்டாம் உலகப்போர் அப்போது முடியும் தருவாயில் இருந்தது. ஏற்கனவே ஐரோப்பியப் போர்ப் பகுதிகளில் அச்சு நாடுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில் அந்நாடுகளின் ஆசியக் கூட்டாளியான ஜப்பானை அணுகுண்டு போட்டுத்தான் பணிய வைக்க வேண்டும் என்ற நிலை அப்போது இல்லை. எனினும் அமெரிக்கா தான் செய்து வைத்திருந்த அணுகுண்டுகளைப் பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தது. அதற்கான களம்? நியாயமாகப் பார்த்தால் சோதனை செய்து பாக்க வேண்டிய இடம் ஜெர்மனிதான். ஆனால் ஜெர்மனியில் குண்டுகளைப் போட்டு சோதனையில் ஈடுபட்டால் அது தனது கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பாதிக்கும். எனவே அந்நாட்டை விட்டு விட்டு தூரகிழக்கு நாடான ஜப்பானில் குண்டு வீசினால் ஐரோப்பா தப்பித்துக் கொள்ளும். பரிசோதித்தும் பார்த்தாற்போலும் ஆயிற்று என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி  ஹாரி ட்ரூமனுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே ஜப்பானிய நகரங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சின் போர விளைவுகளை ஜப்பானிய நகரங்கள் இன்றைக்கும் அனுபவித்து வருகின்றன. எனவே அணு குண்டுகளைத் தவறான முறையில் பயன்படுத்திய முதல்நாடு அமெரிக்காதான் (இன்று வரை, கடைசி நாடும் அதுதான். வேறு யாரும் அற்குப் பின்னர் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வில்லை) இந்நிலையில் மற்ற நாடுகளிடம் அணுகுண்டுகள் இருந்ததால் அவர்கள் அதனைத் தவறான முறையில் பயன்படுத்துவார்கள் என்ற அமெரிக்காவின் கூற்று வஞ்சகத்தன்மை உடையதாகும்.

இஸ்ரேலுக்கு ஒரு நீதி ஈரானுக்கு ஒரு நீதி....
      சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் அணுகுண்டு வைத்துள்ளது. அமெரிக்கா அதற்கான தொழில் நுட்பத்தை அந்நாட்டுக்கு வழங்கியது. ஆனால் ஈரான், ஆக்கப்பணிகளுக்கான அணுசோதனை நடத்தக்கூடாது என அமெரிக்கா பலவழிகளிலும் மிரட்டுகிறது. ஈரான் அணுகுண்டு தயாரித்து விடுமே என்ற பயம்தான் அதற்குக் காரணமாகும். ஈரான் ஒரு அணு ஆயுத நாடாக உருவாகி விட்டால் தனது தத்துப்பிளையான இஸ்ரேல் பாலஸ்தீன மக்களையும், பிற அரபு நாடுகளையும் மிரட்டுகின்ற தனது வல்லாண்மையைச் செலுத்துகின்ற நிலைக்குத் தடங்கல் ஏற்பட்டு விடும் என்ற அமெரிக்காவின் பயமே இதற்குக் காரணம். தனது தத்துப்பிள்ளையான இஸ்ரேலின் அடாவடித்தனமானச் செயல்களைப் பாதுகாக்கவே அமெரிக்கா ஈரானின் அணு சோதனை மயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

மேற்கு ஆசியாவே குறி...
     இரண்டு உலகப் போருக்குப்பின்,அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு பெருமளவு இலக்காகி வரும் பகுதி மேற்கு ஆசியாதான். உலகத் தேவையின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வளம் இந்தப் பகுதியல் இருப்பதால், அமெரிக்கா வித்துப் பிடித்து இந்தப் பகுதியையே சுற்றி வருகிறது. அமெரிக்க நாட்டின் வாகனங்களும், கனரக எஞ்சின்களும் இயங்கிக் கொண்டிருப்பது இந்த எண்ணெயினால்தான், உலகின் எண்ணெய் வளத்தை யார் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ, அவர்தான் உலகச் சந்தையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த எண்ணெய் வளம் சவூதி அரேபியா, குவைத், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு எண்ணெய்யை அமெரிக்காவே பயன்படுத்தி வருகிறது. அதுவும் மிகப் புறைந்த விலக்கு இதனாலேயே அமெரிக்கப் பொருளாதாரம் வளம் பெற்று்ளது. இந்த நிலையினைத் தக்க வைத்துக் கொள்ள வுண்டும் என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும். எனவே மேற்கு ஆசியாவில் இருக்கும் அரபு நாடுகள் அரபு தேசியம் என்ற கோட்பாட்டின அடிப்டையில் ஒன்று சுர்ந்து விட்ால் அது தனது நலன்களுக்கு விரோதமாக அமைந்து விடக்கூடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.அரபு உலகத்தில் அமெரிக்காவின் வல்லாண்மைக்கு எதிராக யாரேனும் பேசவிட்டால் அவரை உடனடியாக ஒழித்துக் கட்டுவது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் முதன்மையான ஒன்று.  அப்படி அழிக்கப்பட்டவர்தான் ஒரு காலத்தில் அமெரிக்காவால் வளர்க்கபட்டு பின்னர் அந்நாட்டின் மோசமான எதிரியாக மாறிய ஈராக் அதிபர் சதாம் ஹுஸைன்.
    1990 ஆம் ஆண்டு சதாம் ஹுஸைன் தனது, அண்டை நாடான குவைத்தை இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆக்கிரமித்த போது, அதைக் காரணம் காட்டி 1991 ஜனவரி மாதம் அமெரிக்கா பன்னாட்டுப் படைகளின் துணையுடன் ஈராக்கின் மீது போர் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த நாசகாரத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஈராக் மக்கள் மடிந்தனர். போர் ஒரு மாதத்திற்குள் முடிவுக்கு வந்த போதிலும், அமெரிக்காவின் மறைமுகப் போர் பல ஆண்டுகள் ஈராக்கின் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை என்ற பெயரில் உணவு, உடை, உயிர்காக்கும் மருந்துகள் அந்நாட்டுக்குக் கொண்டு செல்வது தடுக்கப்பட்டன. இதற்கு ஐ.நா சபையும் துணை நின்றது. உயிர்காக்கம் மருந்துகள் இல்லாமல் இந்தக் காலகட்டத்தில் மட்டும் ஐந்து லட்சம் ஈராக் குழந்தைகள் மடிந்தனர். பொருளாதாரத் தடைகள் பற்றியும், அதன் காரணமான குழந்தைகளின் உயிரிழப்பு பற்றியும் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவிற்கான ஐ.நா. தூதர் மேடலின் ஆல்பிரைட் அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணுப்போது கொடுத்த விலை சரி தான் என்று நினைக்கிறோம். என்றார். என்ன ஆணவமான வார்த்தைகள். எங்களுக்கு லாபம் தான் குறி என்பதை எவ்வளவு பட்டவர்த்தனமாப அவர் சொல்லிவிட்டார்.
     மீண்டும் 2003 மார்ச்சில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இப்போது சொன்ன காரணம், ஆரான் உயிரிக்கொல்லி இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது. எனவே அவற்றை அழிக்கவே போரில் ஈடுபட்டோம் என்றது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவால் ஒரு சிறு துருப்பு இரசாயன ஆயுதங்களைக் கூடப் போர் முடிவில் கைப்பற்ற முடியவில்லை.
     ஈரானுடன் பத்து ஆண்டுகளுகு்கும்  மலாக, ஈராக் போரில் ஈடுபட்டிருந்தபோது, அமெரிக்கா ஈராக்கின் சதாம் ஹுஸைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஏராளமான இரசாயன ஆயுதங்களையும், ஆந்திராக்ஸ்களையும், பலகோடி டாலர் நிதி உதவிகளையும் அப்போது அமெரிக்கா சதாம் ஹுசைனுக்கு வழங்கியது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே சதாம் ஹுஸைன் ஈரானுடன் போரிட்டார். தனக்கு எதிராகச் செயல்பட்டு வந்த  “கு்ர்து“ இன மக்களைக் கொன்றார். ஆக, மிக மோசமான அட்டூழியங்களைச் செய்து வந்த சதாம் ஹுஸைனுக்கு இந்தக் காலகட்டத்தில் ஆதரவாக நின்றது அமெரிக்காதான்.
    ஈராக்கின் மீது இரண்டாவது முறையாக அமெரிக்கா போர் தொடுக்க முடிவு செய்தபோது, அதற்கு பலத்த சந்தேகம் ஒன்று இருந்தது. தான் ஏற்கனவே வழங்கியிருந்த உயிர்க்கொல்லி இராசாயன ஆயுதங்கள் இன்னமும் சதாம் ஹுஸைனின் கைவசம் இருக்குமோ, அந்நாட்டின் மீது போர் தொடுத்தால், அவர் அந்த ஆயுதங்களை அமெரிக்கத் துருப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்துவாரோ என்ற சந்தேகமே அது. எனவே போர் தொடுக்குமுன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செயய அமெரிக்கா விரும்பியத. தொடர்நது பல ஆயுத பரிசோதனை ஆய்வாளர்களை அனுப்பி, ஈராக்கில் இன்னமும் இரசாயன ஆயுதங்கள் உள்ளனவா என்று பார்த்து வரச்சொன்னது (எல்லாம் ஐ.நா.சபையின் ஆதரவுடன்தான்). அங்கு இரசாயன ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று ஆய்வாளர்கள் சொன்ன பிறகுதான் அமெரிக்கா போரில் ஈடுபட்டது. வெற்றியும் கண்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
      அமெரிக்காவின் இந்த கபட நாடகம் உலகம் அறிந்த ஒரு நகழ்ச்சிதான். இன்றைக்கு ஈராக்கில் அமெரிக்காவின் கைப்பாவை ஒருவரே ஜனாதிபதியாக இருக்கிறார். ஆப்பகானிஸ்தானத்திலும் இதே நிலைதான்.  “யூனோகால்” என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாப் பணியாற்றிய ஹமீது கர்சாயே இப்போதைய ஆப்கானிஸ்தானத்தின் ஜனாதிபதி. எனவே அமெரிக்காவின் குறிக்கோள்களும், திட்டங்களும் மிகத் தெளிவானவை. மேற்கு ஆசியாவில், தனக்கு ஒத்து ஊதுகின்ற, தனது நலன்களுக்கு ஊறு செய்யாத தலைவர்களே ஆட்சியல் இருக்க வேண்டும். என்பதே அது. சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளின் மன்னர்கள் அமெதிக்காவின் மேலாண்மைக்குத் துணை போவதால் அவர்கள் அந்நாட்டின் செல்லப்பிள்ளைகளாக பாதுகாப்பாக உள்ளனர்.

பாலஸ்தீன மக்களின் போராட்டம்.
     11.9.2001 பற்றிப் (அமெரிக்காவின் இரட்டைப் கோபுரங்கள் தகர்ப்பட்ட நாள்) பெரிதும் பேசுகிற அமெரிக்கா 11.9.1922 ஐ வதிகாயக மறந்து விட்டது. இந்த நாளில் தான் பிரிட்டிஷ் அரசு, அரபு நாடுகளின் ஆட்சேபனைகளையும் மீறி பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான நடு ஒன்றை உருவாக்குவதற்கான ஆணையினைப் பிறப்பித்தது. பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவற்கு எதிராக உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தபோது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பால்ஃபேர் பிரபு “பாலஷ்தீனத்தில் தற்போது வாழ்ந்து வரும் மக்களைக் கலந்தாலோசித்து அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்ளம் முறையினைப் பின்பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஸியோனிசம் என்பது சரியோ, தவறோ, நல்லதோ, கெட்டதோ, அது பழமை வாங்ந்த பாரம்பரியங்களிலும் தற்காலத்தேவைகளிலும், தற்போது அந்தப் புராதனநாட்டில் வாழும் ஏழு லட்சம் அரபியர்களின் ஆகைகள் அல்லது தப்பெண்ணங்களை விட ஆடமான நம்பிக்கைகளில் வேரூன்றியது” என்றார். ஆரேபியர்களை விடவும், யூதர்கள் மேலானவர்கள். அவர்களின் நம்பிக்கை மேலானது என்பதை எவ்வளவு வெளிப்படையாக ஆணவமான அவர் கூறினார் என்று பாருங்கள். மேற்கத்திய நாடுகளின் இந்த கையை நெறிதவறிய எண்ணப்போக்கே இஸரேலின் அனைத்து விதமான மனிதாபிமானமற்ற கொடுஞ் செயல்களுக்கும் அந்நாடுகள் துணை போவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
      14.5.1948ல் இஸ்ரேல் ஒரு தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தப் பிரகடனம் வெளியான சில நிமிடங்களுக்குள்ளாகவே, அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்தது. தொடர்ந்து அந்த நாட்டிற்கு இன்று வரை நிதி உதவியும் ஆயுத உதவியும் அளிதது வருகிறது. இஸ்ரேலைப் பாதுகாப்பது அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது. இஸ்ரேல், அரபு நாடுகளுடன் நடத்திய அனைத்துப் போர்களிலும் அமெரிக்கா அதனை ஆதரித்துள்ளது. பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான மனிதாபிமான மற்ற கோரத் தாக்குதலில் ஈடுபட்ட போதெல்லாம் அமெரிக்கா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேலைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையிலோ, பாதுகாப்புச்சபையிலோ தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதேல்லாம்,அமெரிக்கா தனது சிறப்பு அதிகாரமான “வீட்டோ” வைப் பயன்படுத்தி, அத்தீர்மானங்களைத் தோற்கடித்துள்ளது என்பதுதான் கடந்த கால் வரலாறு.

வீழ்ச்சி நிச்சயம்
     அமெரிக்காவின் வெற்றி தற்காலிகமானதே என்று நாம் ஆறுதல் அடைய பல நியாயமான காரணங்கள் உள்ளன. அமெரிக்காவை விட மிகப் பெரிய வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசிக,ரோமானிய, கிரேக்கப் பேரரசுகள் இருந்த இடம் தெரியவில்லை. சூரியனே மறையாத நாடு எங்கள் நாடு என்று ஒரு காலத்தில் பீற்றிக கொண்ட ஆங்கில சாம்ராஜ்யத்தின் இன்றைய நிலை என்ன? எனவே, இஸ்லாம் அமெரிக்கா ஏகாதிபத்தியததின் தாக்குதல்களை முறியடித்து பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழும் என்பது திண்ணம்.

9 ஜனவரி, 2010

ஊமை உலகம்

ஏ! பயங்கர வாதிகளே!
இந்த நிராயுத மக்களிடம்
உங்களின்
தேவை என்ன?

கொள்ளையடிக்கும்
வெறிச்செயல்
இன்னும் அடங்கவில்லையா?

குண்டு வீச்சால்
வீதியெங்கும்
கட்டிடச் சரிவுகள்
அழுகுரல், பிணக்குவியல்!

மக்களை கொன்றபின்
மன்னிப்புக் கேட்கும்
தலைவர்கள் வாழும் மண்!

7 ஜனவரி, 2010

சீரழிக்கும் சின்னத்திரை நாடகங்கள்

மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக, அன்றய திரைப்படங்கள் வருடக்கணக்கில் ஓடின ஆனால் மக்கள் ஆதரவு இருக்கிறதோ, இல்லையோ இன்றைய சின்னத்திரை தொடர்கள் வருடக் கணக்கில் ஓட்டப்படுகின்றன. ஆமை வேகம், நத்தை வேகம் என்பார்களே அதையும் விட மிகக் குறைவான வேகத்தில் இத் தொடர்கள் நகர்கின்றது. ஆரம்பக் கதை என்ன என்பது தொடர் முடியும் வரை மறந்து போகும் இயக்குநர்கள்.. பார்க்கும் மக்களின் நிலையும் இதுதான்.
கதை அம்சம் இருக்கிறதா? என்று பார்த்தால் அரைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான பெண் வேறு ஒருவருடன் ஓடி விடுகிறாள்.  ஆனோ, பெண்ணோ கள்ள உறவு வைத்திருப்பது எனப்பல வக்கிர உணர்வுகளே தொடர்முழுவது மூலக்கதையாக உலா வருகிறது.
இப்படியான கதைகள் சினிமாவில் இல்லையா? என்ற கேள்வி எழாமலில்லை. இருக்கிறது. ஆனால் அதன் ஓட்டம் இரண்டரை மணித்துளிகளில் முடிவுக்கு வந்து விடுகிறது. அதன் தாக்கம் குறைவுதான். ஆனால் சின்னத்திரை நாடகங்கள் வருடம் முழுவதும் நீழுவதால் அதன் கருவோட்டம் மக்களின் குறிப்பாக பெண்களின் மனதில் ஆளப்பதிந்து விடுகிறது. சிந்தனையை ஒரு சேர கட்டிப்போட்டது போல் அவர்களின் எண்ணம் அதிலேயே உறைந்து போய்விடுகிறது. அதன் பின்விளைவுகளால் பாதிக்கப்படுவது ஆண்வர்க்கமே. இது தான் நிதர்சனமாக உண்மை.
தொலைக்காட்சிப் பெட்டிகள் நமது வீடுகளின் வரவேற்பு அறைகளில், முன் வீடுகளில் வந்து விட்டதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதனைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.  “நேரப்போக்குக்கு வேறு என்ன செய்வது” என்ற சமாளிப்பு வேறு. இத் தொடர்களால் நமது மனம் கெடுகிறது. பொன்னான நேரம் பாழாகிறது. வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் போக்கிடமே இந்தத் தொடர்கள் தான். பல பெண்கள் சமையல் பணிகளைக் கவனிப்பது கூட இத் தொடர்களின் விளம்பர இடைவெளியின் போது தான் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது உள்ளது. காலை 11 மணிக்குத் துவங்கி இரவு 10.30 மணிவரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் சலித்துப் போகும் அளவுக்குத் தொடர்கள்.
நல்ல சமூகம் சார்ந்த கதையினைப் படமாக்கிட பல சின்னத்தரை தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். மக்களிடம் சொல்வதற்கு ஏற்ற வரலாற்று நிகழ்வுகள், சமூக அவலங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் எனப் பல நல்ல அம்சங்கள் இருந்த போதிலும் அவற்றை சின்னத்திரை தொடர்களின் கதை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் விளம்பரம் கிடைக்காதே என்ற ஆதங்கமே இதற்கு காரணமாகும். இந்நிலை மாறிட வேண்டும். நல்ல தொடர்கள் வரவேண்டும்.  அதே நேரத்தில் அத்தொடர்களைப் பார்த்து ஆதரவு அளிக்கும் வண்ணம் மக்களின் இரசனையிலும் மாற்றம் நிகழ வேண்டும்.
            இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் நன்மை பயக்கும்.

4 ஜனவரி, 2010

சீரழிக்கும் சின்னத்திரை நாடகங்கள்......

சமீப காலங்களாக சின்னத்திரையின் வளர்ச்சி மனித சிந்தனையை ஒரு நேர்பார்வையில் சிறைவைக்கும் சிறை என்று சொன்னால் அது மிகையாகாது.

விஞ்ஞான வளர்ச்சி மனித அறிவிற்கு தீணியாக அமைந்தாலும், மறுபுறம் சீரழிவையும் வளர்க்கிறது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

குறிப்பாக...
அதில் வரும் நாடகங்கள் மனித வாழ்க்கையின் மரபை மீறிய ஒரு செயல்களைத்தான் கற்பிக்கிறது.

சூழ்ச்சியால் பெரிவர்களை சிறியவர்கள் வெல்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கிறது. குடும்பப் பெண் வேறொரு ஆண்மகனோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது சாமர்த்தியமான ஒன்றாக சிந்தனை ஓட்டத்தில் ஓட விடும் சின்னத்திரை இயக்குநர்கள் மனிதாபிமானங்களையும், மனித நேயத்தையும் போதிக்கத்தக்க ஒரு தொடரை இந்த மக்களுக்கு தரலாம். என்று அவர்களுக்கு யோசை சொல்லிக் கொண்டிருக்காமல் நாம் தான் அவ்வகை கதைகளை தாங்கி வரும் நாடகங்களை பார்க்காமல் தவிற்க வேண்டும் .

2019 டிசம்பர்